Sunday 22 October 2017

6.1 பரசிவ வணக்கம் - ஆறாம் திருமுறை



எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்றனையே ஏத்து

எல்லாம் வல்லவன்! எங்கும் நிறைந்தவன்! இறைவன் ஒருவரே!
அவர் அம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்! நம் கண்களில்
மணியில் ஒளியாக, எல்லோரும் அறிய
அம்பலமாக , அந்த அம்பலத்தில்
ஆடிக்கொண்டிருக்கிறார்! அவரை பணிந்து, நினைந்து உணர்ந்து தவம்
செய்தால் ஒளியை கண்ணிலிருந்து உள்வழி அக்னிகலையை கூடிபின்
மேலேற்றினால் நமக்கு எல்லாம் செயல்கூடும்! என்மீது ஆணை என்று
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளியிருக்கிறார்.






ஞான சற்குரு சிவசெல்வராஜ்