Thursday 31 August 2017

55. நாடக விண்ணப்பம்

மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
இரக்கமுள்ளளவர்க் கியல்பன்று கண்டீர்
தடுக்கி - லாதெனைச் சஞ்சல வாழ்வில்
தாழ்த்து லார் தோழும் ஒற்றியூர் உடையீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே

பாழுங்கிணற்றில் வீழ்ந்த ஒருவனை காப்பாற்ற தூக்கி
பாதியில் கைவிட்டால் அது இரக்கமுடையவர் செயலாகுமா?
அதுபோல துன்பத்தில் அழுந்தி பரிதவிக்கும் என்னை மீண்டும்
மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துவது அழகாகுமோ! இறைவா இது
உன் கருணைக்கு தகுமோ? என்துன்பமெலாம் நீக்கி வினைமாற்றி
உன்னடி சேர அருள்புரி நடுக்கிலார் தொழும் ஒற்றியூர் உடையீர்!
இறைவனை தன் கண்மணியில் ஒளியாக கண்டு தொழும் அடியார்கள்
எதைக்கண்டும் நடுங்க மாட்டார்கள். எதற்கும் பயப்படமாட்டார்கள்,
அவர்கள்தான்  மெய்யடியார்கள்! "நாமார்க்கும் குடியல்லோம் நமனை
அஞ்சோம்"என நாவுக்கரசர் நாம் யாருக்கும் அடிமையில்லை
எமனைக் கண்டு பயமில்லை என உறுதியுடன் கூறுகிறார்!
"பணியோம் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே" என
அபிராமி அன்னையை பணிந்த நான் உலகில் வேறு எவரையும்
பணியமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார்! பயம் கடுகளவேனும்
இல்லாதவனே ஞானி! ஞானிகளின் இயல்பே இதுதான்! நாம் ஞானம் பெற
நம்முள் இறைவன் ஆடும் நாடகம் வினைகள் தந்து நம்மை செம்மைப்படுத்துவதுதான்!
நம்மை செம்மைப்படுத்துவது தான்! நம்மை காத்தருள்வதுதான்! ஞான நாடகம் இது!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment