Thursday 31 August 2017

54 திருவண்ண விண்ணப்பம்


கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன்
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இல் ஏழைமுகம் பாரோமோ

திண்ணப்பர்  கண்ணை அப்பியதால் சிவனால் கண்ணப்பா
என்றழைக்கபட்டார். "காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்
காண்"என்று திருநாவுக்கரசர் கூறுகிறார். கண்ணப்பருக்கு அவர்
கண் ஒளி-சிவமே அருள்பாலித்து! இதுபோலவே மகாவிஷ்னு
சிவனை அர்ச்சிக்க மலர் இல்லாமல் 1000-வது மலராக தன் கண் மலரை
எடுத்து அர்ச்சித்தார் அல்லவா!? சிந்தியுங்கள்! புராணம் கூறுவது கதை மட்டுமல்ல!

பக்தி மட்டுமல்ல! ஞானமும் கூடத்தான்! நமக்கு நல்ல பாடந்தான்! பால்
வேண்டி அழுத உபமன்யு என்ற பாலனுக்கு திருப்பாற்கடலை கொடுத்து
அருந்தச்சொன்னாராம் சிவன்! சீர்காழியிலே அழுத பிள்ளை சம்பந்தனுக்கு
பால் கொடுத்து ஞான சம்பந்தர் ஆக்கியருளினார் சிவசக்தி, அருளியது யார்
ஒற்றியப்பர் - கண்மணியிலே ஒற்றியிருக்கும் ஜோதி! சீர்காழியிலே தோணியப்பர்  தோணிபோல உள்ள கண்ணில் உள்ள ஜோதி! கண்ணில் குடியிருக்கும் கடவுள் கருணையால் அழுதவர்க்கெல்லம் அழுது படைப்பான்! நாம் அழுதால் நமக்கு கிட்டும் அமுதம்! எனக்கும் அருள வேண்டும் இறைவா!

நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
பச்சை நிறம் கொண்ட பவளத்தனிமலையே - பாடல் 8

நச்சு ஆகிய மும்மலத்தை கண்டத்தில் கொண்ட கண்மணியே! மணியை
எண்ணி தவம் செய்தால் பச்சை நிற ஒளியும் பின் சிவப்பு நிற ஒளியும்
காணலாம். இது அனுபவ உண்மை! மலையே என்றது கண்மணியையே! 

ஞானசற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment