Wednesday 30 August 2017

53 பொருள் விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே
கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
கலுழ் கின்றேன் செயக்கடவதொன் றறியேன்
இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
திலகமே திரு ஒற்றி எம் உறவே
செல்வமே பர சிவ பரம்பொருளே 

உலக வாழ்க்கையில் உழலும் என் மனமானது ஒரு கோடியாய்
மேலும் மேலும் குற்றங்களை செய்து வினைகளை சேர்த்துக்
கொள்கிறது! கடவுளே நான் என்ன செய்வேன். உன்னை நாடிடும்
அன்பர் உள்ளத்தில் ஒளிர்பவனே இன்ப வெள்ளமே! என் உயிரே
திலகம் போல் உள்ளே புள்ளி வடிவில் விளங்கும் ஜோதியே!
என்கண்மணியே எனக்கு உறவே என் செல்வமே பரசிவமான
பரம்பொருளே.

ஓது மாமறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிரமணியே - பாடல் \

நான்கு வேதங்களிலும் அதன் விளக்கமாம் உபநிடதங்களிலும்
எல்லாவற்றிக்கும் மேலாக சொல்லபடுகின்ற வைரமணி போல்
ஒளி வீசி கொண்டிருப்பது நமது கண்மணி ஒளி ஒன்றைப்பற்றியே!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment