Tuesday 29 August 2017

52. காதல் விண்ணப்பம்



வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அணைய
மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
தஞ்சம் என்றடைந்தே நின்திருக் கோயில்
சந்நிதி முன்னர் நிற்கின்றேன்
எஞ்சலில் அடங்காப் பாவி என் றெனைநீ
இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
கஞ்சன் மால் புகழும் ஒற்றியங்கரும்பே
கதிதரும் கருணையங் கடலே

வஞ்சவினையின் மொத்த உருவம். கொடிய மனம் படைத்தவன்
ஆயினும் இறைவா உன் அருள்வேண்டி உன் சந்நிதிக்கு வந்து
இறைஞ்சுகிறேன். பாவி என ஒதுக்கிடாதே! தேவர்கள் புகழும்
கண்மணி ஒளியானவனே கரும்-பு கண்மணியானவனே கருணைக்
கடலே அருள்புரிக!

கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே  கடவுளே
கருணையங் கடலே - பாடல் 4

கண்ணினுள் மணியே - ஒற்றியங்கனி. அதுவே ஒளி! அது
கருணைக்கடலாகும்! அதுவே கடவுள்! நமகண்மணி உள் கடந்து
நிற்கும் ஒளியே!

ஞால வாழ்வனைத்தும் கானல் நீர் - பாடல் 7

இந்த உலக வாழ்வு கானல் நீர் போன்றது! கானல் நீரை கண்டு ஏமாறும்
மான் போல் மனிதர்கள் மாயையால் உந்தப்பட்டு வினைவழி உலக வாழ்வே
இன்பமெனக் கருதி அலைந்து அலைந்து துன்புறுகின்றனர். திருவடியை உணர்வீர்! தப்பித்துக்கொள்க!

காலோடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக்கடவுளே கருணைஎங்கடவுளே
கால் - திருவடி! பூதம் ஐந்தும் சேர்ந்த திருவடி! ஒற்றிக்கடவுள் கண்மணி
ஒளியே அது! கருணை கடல் தான் இறைவன் நம் கண்மணி ஒளி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment