Sunday 20 August 2017

49 இரங்கல் விண்ணப்பம்

திருஅருட்பா
இரண்டாம் திருமுறை


பற்றி நோக்கிய பாவியேன் தனக்குப்
பரிந்து நீஅருட் பதம்  அளித்திலையே
மற்று நோக்கிய வல்வினை அதனால்
வஞ்ச மாயையின் வாழக்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
அலைதந் திவ்வுலகம் படுபாட்டை
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
ஒற்றி மேவிய உலகுடையோனே

நாம் திருவடியை பற்றி தவம் செய்வோமானால் இறைவன்
அருள்புரணமாக கிட்டும்! துன்பமின்றி வாழ்வாங்கு வாழலாம்!
அதெல்லாமல்,தவம் செய்யாமல், உலகியலின்பத்தில் மூழ்கி
திளைப்பவர் தத்தமது வினைப்பயனால் மனம் கேட்டு நோய்கள்
வந்து உடல் கெட்டு முதுமை வந்து சோர்ந்து சம்சாரசாகரத்தில்
உழன்று துன்புறுவர்! பிறர்படும் துயரங்களை அறிந்து வேதனைப்
பட்டார் வள்ளல்பெருமான்! ஐயோ இறைவனை அறியாது துன்புறுகிறார்களே 
என வருந்தினார்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment