Thursday 17 August 2017

48 சந்நிதி முறையீடு

திருவருட்பா - இரண்டாம்  திருமுறை

ஒற்றி மேவிய உத்தமனே மணித்
தெற்றி மேவிய தில்லைஅப் பாவிழி
நெற்றி மேவிய நின்மலனே உன்னைப்
பற்றி  மேவிய நெஞ்சம்உன் பாலதே

ஒற்றி - கண்ணில் - துலங்கிய இறைவனே! மணித்தொற்றி -
கனமணியில் உள்ள ஒளியே! தில்லை அம்பலவாணரே என்
தந்தையே! விழிநெற்றி - மூன்றாவது கண்ணை உடையவனே!
நின்மலனே - மலமற்றவன் இறைவன்! உன்னைப்பற்றி உன்னுடன்
உணர்வால் ஒன்றி கலந்த என் நெஞ்சம் நீயிருக்கும் இடமே!
உன்னுடையதே!

கல்ஆலின் ஈற்றுப் பொருள் அருள் ஆதியே - பாடல் 2
கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு
அருளிய உபதேசம் எனக்கு தருக ஆதிமுதல்வனே! உலகின்
முதல் குரு - தட்சிணாமூர்த்தி! கல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து
சனகாதி முனிவர்க்கு ஞான உபதேசம் நல்கினார்! என்ன? எப்படி?
"இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டினார்" இதுவே ஞான உபதேசம்
வாய் பேசவில்லை! விழித்திருந்து,  மனமாகிய அசுரனை அந்த இறைவன்
இருக்கின்ற கண்மணியில் திருவடியில் ஒப்படைத்தால் - சரணடைந்தால்
மோட்சம் கிட்டும்! தவம் செய்வது இப்படித்தான்! கண்மணியில் உணர்வால்
நிற்பது - நிலைநின்றால் கண்மணியில் உணர்வை நிறுத்த உபதேசம் கொடுத்து தீட்சை கொடுப்பதே வள்ளலார், எமக்கிட்ட பணி! காலங்காலமாக எல்லா சித்தர்களும் ஞானிகளும் உபதேசித்த ஞானம் இது! " சும்மா இருக்கும்" தவம்!  அறியுங்கள்! உணருங்கள்!

சோதியே திருத்தோணி புரத்தானே - பாடல் 3
சோதியாகிக இறைவன் நம் கனமணியில் துலங்குகிறான்! திருத்தோணிபுரம் - என்பது திருவாகிய இறைவன், தோணி போல இருக்கும் கண்ணில் உள் புறம் இருப்பவன்! "தோணிபோல் காணுமடா காணுமடா அந்த வீடு என சித்தர் பாடல் கூறும் மெய்ப்பொருள்  இரகசியமும் இதுதான்! சீர்காழியிலே கோவில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம்
தோணியப்பர்! தோணிபோல் உள்ள கண்ணிலே அப்பியிருப்பவர் ஆதலால். கண்மணி ஒளி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment