Tuesday 29 August 2017

2.51. சிவானந்த பத்து


இச்சை உன்டெனக் குன்திரு மலர்த்தாள்
எய்தும் வண்ணம் இங்கென செயவல்லேன்
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது
குதிப்பில் நின்றது மதிப்பின் இவ்வுலகில்
பிச்சை  உண்டெனிற் பிச்சரிற் சீறும்
பேயருண்மனை நாயென உழைத்தேன்
கெச்சை மேனி எம் திருவொற்றி அரசே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே

இறைவா உன்மலரடி - மெய்ப்பொருள் - கண்மணி ஒளியை
அடையவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு! ஆனால் என் மனமோ
என்குறிப்பில் நிற்காது. அலைபாய்கிறதே! உலக இச்சையில் உழல்கிறதே!
பேயனே அலைந்தேன் நாயென திரிந்தேன். இப்படி இருந்தால் உன்மலரடி
எப்படி அடைவேன். தவத்தால் சிவந்த கண்களில் மணியில் ஒளிரும் 
ஒளியான இறைவா அமுதம் நல்கும் சிவமே ஒளியே அருள்க!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com

No comments:

Post a Comment