Monday 28 August 2017

2. 50. நெஞ்சோடு நேர்தல்

திருமுறை  2
50. நெஞ்சோடு நேர்தல்

அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடை என்றறிமட நெஞ்சே
கணிகொள் மாமணிக் கலன்கள் நம் கடவுள்
கண்ணுள் மாமணிக் கண்டிகை கண்டாய்
பிணி கொள் வன்பவம் நீக்கும்வெண் ணீறே
பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
திணி கொள் சங்கர சிவசிவ என்று
சென்று வாழ்த்தலே செய்தொழிலாமே

நாம் உடுக்க கோவணம் தந்தார் இறைவன்! அதுவே நமக்கு
உகந்த ஆடையாகும்! கோவணம் - கோ மணம் - கோ மனம்
நம்மில் கண்மணியில் கோவாகிய இறைவன் தலைவன்
இருக்கிறான் ஒளியாக! அவனிடம் மனதை வை என்பது தான்
பரிபாஷை. கண்மணியிலுள்ள இறைவன் கோவணம் போல
நம் மும்மலத்திரையை ஆடையாக உடையவன்! நம் கண்மணியிலுள்ள
அணிகலம் தான் இறைவனின் அணிகலன் தான் - பூண் போல
இருக்கும் நம் வினையாகிய விஷம்! அந்த பாவ வினைகளை நீக்க
நாம் தவம் செய்யும் போது ஊற்றெடுக்கும் வெண்மையான கண்ணீரே.
பூசும் வெண்ணீறாகும்! நமக்கு தொழில் இறைவன் புகழ் பாடுதலே
சதா காலமும் இறைவனை எண்ணி எண்ணி மனதை தூய்மை யாக
வைத்திருப்பதேயாகும்! நம் தொழில் சீவனை சிவமாக்குவது தான்!
அந்த சிவனே உடனிருந்து அருள்வான்!

சுகர் முதல் முனிவோர்உக்க அக்கணம் சிக்கெனதுறந்தார்!  - பாடல் 8
சுகப்பிரம்மம் என்னும் ஞானி பிறந்த உடனே ததுறவு பூண்டார். பிறவி
ஞானி! இன்னும் முனிவர் பலர் நினைத்த மாத்திரமே இறைவனை அடைய
தடையான உலகை துறந்தனர் . இன்றே இப்பொழுதே நாம் செய்ய வேண்டியதை
செய்ய வேண்டும்  நாளை நாளை என தள்ளிப் போடக்கூடாது? நாளை நமனின் நாள்!?
யாரிவார்! ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்! இக்கணமே செய்!

தூயநெஞ்சமே சுகம் பெற வேண்டில்
சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
காய மாயமாம் கான்செறிந் துலவும்
கள்வர் ஐவரைக் கைவிடுத்தன் மேல்
பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
காய சோதிக்கண் டமருதல் அணியே!  பாடல் 10

நெஞ்சம் தூய்மையானால் சுகம் பெறலாம்! அதற்கு வழி
சொல்கிறோம்! நமது உடம்பில் ஐம்புலன்ளும் நம்மை மனம்
போனபடி வினைக்குதக்கபடி ஆட்டிவைக்கின்றனர்! அவர்களை
விட்டு அதற்க்கு மேலாக ஆணவம் கன்மம் மாயை என்னும்
மும்மலங்களாகிய திரையும் உள்ளது! இதுவே நமக்கு எதிரி! இவர்களை
வெல்ல இரவு பகல் அற்ற இடமான பரவெளியில் ஆகாயத்தில் - கண்மணி
நிற்கும் தலம் ஆகாயம்! அதில் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவனை கண்டு உணர்ந்து நிலை நிற்றலே, ஒப்பற்ற தவமும் ஆகும்! இதுவே நாம் உய்யும் வழி! பேரின்பம் பெறும் வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
WWW.VALLALYAAR.COM

No comments:

Post a Comment