Monday 17 April 2017

2.35 ஆனா வாழ்வின் அலைசல்



துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத்
துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம்
கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த
உததிபோல் கண்கள் நீர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள்
அண்ணலே ஒற்றியூர் அரசே

நாம் எப்படி தவம் இயற்ற வேண்டும் என்கிறார் வள்ளலார்! உள்ளிவாய் மடுத்து உள் உருகி ஆனந்த கடல் போல் கண்ணீர் உகுப்பார்!
கண்மணி உள்ளே உணர்வு பெற்று தவம் செய்கையில் உளம் உருகும் ஊன் உருகும் கண்ணீர் கடல் போல், வற்றாத கங்கையென ஊற்றெடுத்து பாயும்! அங்ஙனம் தவம் செய்து வரும் போது உள்ளே அமுதம் சொட்டும்! அதை அருந்தி அண்ணல் மலரடியை சேரலாம்! இதை
விடுத்து பெண் மாயையில் மனம் இழந்தால் மதிகெடும்! உடல் கெடும்!
உயிர் போய்விடும்!

அரியது நினது திருஅருள் ஒன்றே அவ்வருள்
அடைதலே எவைக்கும் பெரியதோர் பேறு - பாடல் 3

நாம் மனிதனாக பிறந்து - நல்ல படியாக பிறந்தது அரிது!
புண்ணியம். அரிதாக கிடைத்த இம்மானுட பிறவியில்
கிடைத்தற்கு அரியது இறைவனின் திரு அருள் ஒன்றே!
எப்பாடு பட்டாயினும் இறையருளை பெறவேண்டும்!
இதைவிட பெரும் பேறு இவ்வுலகில் வேறில்லை!

அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும்
மருள்வதென் இயற்க்கை - பாடல் 5

அருள்வடிவானவன் இறைவனவன்! கருணையே உருவானவன்தான் இறைவன். இதை உலகம் அறியும்! அது போல மருளே மயக்கமே - மாயையால் தடுமாறுதலே மனித இயல்பு! வினைகளால் பிறந்த
- மும்மலத்தால் சூழப்பட்ட மனிதன் அதிலிருந்து விடுபட ஒளியை நாட வேண்டும்! அந்த ஒளி - கருணையே வடிவான இறைவன் நம் கண்மணி உள்ளிலேயே ஒளியாக துலங்குகிறான்! அறிக! உணர்க!
நிலைக்க!
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:

Post a Comment