Tuesday 28 February 2017

2.12 திருவருள் வேட்கை

மன் அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன் அமுதா உண்டகளாம் முன்னி முன்னி வாடுகின்றேன்
என் அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ 


மனிதர்களுக்கு அமுதம் கிடைக்க வழி செய்யும் உன் திருவடியை
எண்ணி தவம் செய்வோர்க்கு நல்ல உணவு கொடுப்பதே மிகவும் மேன்மை
தருவதாகும். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கலாம். புண்ணியச் செயல்
என்பது சதா காலமும் இறைவனை, திருவடியில் எண்ணி தவம் செய்வார்க்கு
கொடுக்கும் உணவே! இறைவா நீ அருளுகின்ற அமுதம் உள்ளிருந்து பெற
உன்னி உன்னி உள் புக தவம் செய்து தவம் செய்து வாடுகிறேன்.
என் அமுதமான என்னுள் இருக்கும் பரஞ்சோதியே அருள் புரிவாயாக!

பொறுக்காப் பத்து

பொறுக்காப் பத்து

மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
விரைமலத் துணைதமை விரும்பாப்
பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய வமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகை வாழ் சரவண பவனே


சத்தியமாக, நெறியோடு வாழும் அன்பர் உள்ளத்தில், உள்-அகத்தில்
கண்மணி உள்ளே -நம் மெய் - உடல் உள்ளே விளங்கும் இறைவா
உன் திருவடியாகிய இரு கண்மணி ஒளியே! மலர் துணை - இருமலரடி.
ஐயரும் இடப்பால் அம்மையும். நம் வலது கண் சிவம் இடதுகண் சக்தி.

சிவமும் சக்தியும் சேர்ந்தால் பிறப்பான் ஆறுமுகன். வருத்தி அளித்திடும்
தெள்ளியயமுதே - நாம் தவம் செய்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து
என்ற நிலையே இங்கு வருந்தி என்கிறார் வள்ளலார். அப்படி தவம் செய்கையில்
அமுதமான ஆறுமுக ஒளி கிட்டும். அது பெண்மோகம் கொண்டவர்க்கு கிட்டாது.
அப்பொருளே தணிகை வாழ சரவணபவன் மெய்ப்பொருள்.

தன்மயக்கற்றோர்க் கருள் தரும் பொருளே - பாடல் 2

தன்மயக்கம் - நான் என்ற மயக்கம் மும்மலம் உடையவர்களுக்கு கிட்டாது
அது இல்லாதவர்க்கு அருள்தரும் மெய்ப்பொருள்.

சக்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே - பாடல் 7



Saturday 18 February 2017

2.11 கொடை மடப் புகழ்ச்சி


திரப்ப டும்திரு மால் அயன் வாழ்த்தத்
தியாகர் என்னும் ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர் உமை அடைந்தால்
 றந்தொரு வார்த்தையும் சொல்வீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர்  இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர் துதித்  தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர் உடையீரே


நம்கண் மணியினுள் விளங்கும் ஜோதியே சிவமே தியாகர்
என மாலும் பிரம்மனும் வாழ்த்தினர். திருவாகிய ஒளி ஒற்றியிருக்கும்
ஊர் கண்மணி! அதனால் இவ்வூர் திருவொற்றியூர் எனப்பட்டது, திருவொற்றியூரில்  குடிகொண்டிருக்கும் இறைவன் ஜோதியே தியாகராசர் என்றழைக்கப்பட்டார்.

தீவிர சாதனை செய்து உன்னையே நாடிடும் அன்பருக்கு அருள்செய்யே!
உன் வாய் திறவாயே! அருளை வேண்டி புலம்பும் உன் அடியவர்களுக்கு
அருள் தியாகராசா! என வள்ளலார் வேண்டுகிறார்.
 

வெள்ளிமாமலை வீடென உடையீர் விளங்கும்
பொன்மலை வில் எனக் கொண்டீர்
எள்ளில் எண்ணெய் போல்    - பாடல் 2


நமது கண்மணி வெள்ளைவிழிக்கு நடுவே உள்ளதல்லவா
அதைத்தான் வெள்ளிப் பனிமலை என்றார். பனிபோல் பளிங்குபோல்
கண் உள்ளது. நாம் தவம் செய்து வில் போன்று கண்ணிலிருந்து உள்ளே
பாயும் அம்புபோல் ஒளி ஊடுருவிச் சென்று முச்சுடரும் ஒன்றாகி காணும்
ஜோதி தங்கம் போல் தகதகக்கும்! பொன்போல் மின்னும் பேரொளியை
காணலாம்.  இறைவன் எள்ளில் எண்ணெய் போல் நம்முள் கலந்துள்ளான்.
பாலில் நெய் போல் இருக்கிறான். எள்ளை செக்கிலிட்டு ஆட்டவேண்டும்.
அப்போது தான் எண்ணெய் கிடைக்கும். பாலைகாய்ச்சி உறை விட்டு
தயிராக்கி கடைந்து வெண்ணை எடுத்து அதை உருக்கினால் தான் நெய்!

கோயிலாக என் நெஞ்சகத் தமர்ந்த குணத்தீர்  - பாடல் 10
என் நெஞ்சமே கோயிலாக கொண்ட இறைவா! ஐந்து பூதங்களும்
சேர்ந்த இடமே நெஞ்சம். மனம் இருக்கும் இடமே எண்ணம் உதயமாகும்
இடமே நெஞ்சம். அது நம்கண்கள்.

Wednesday 15 February 2017

2.10 திரு முல்லை வாயில்



10 திரு முல்லை வாயில்

தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே


தாயை விட பெருங்கருணைகொண்ட பரஞ்சோதியே! கண்மலர்
வாயில் உள் துலங்கும் மாமணி ஒளியே! நீ இருக்கின்ற என் கண்மலரில்
பொருந்திய உன் திருவடியை தொழாமல் - அறியாமல் இருந்தேனே !

கண்குரு மணியே நெஞ்சினன் கண்டதும் கண்டதே - பாடல் 3

கண்ணிலுள்ள மணியிலுள்ள ஒளியே நமகுரு! முதலில் நெஞ்சில் நம்
கண்மணியில் உணர்ந்ததும் நாம் காணலாம் ஒளியே!


2.9 அருளியல் வினாதல்



தேன்என இனிக்கும் திருவருட்கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன் என என்ற உணர்விலேன் எனினும்
உன் திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ


திரு-முல்லை -வாயில் - திருவாகிய ஒளி முல்லை - மலர் - வாயில்
ஒளியானது கண்மலர் வாயில் - கண்மணி மத்தியிலுள்ள துவாரத்தின்
உள் ஒளியே திருமுல்லை வாயில், திருவாகிய இறைவன் இருக்கும்
வாசல் மலர். கண்மலரின் வாசல் - மத்தியிலுள்ள ஓட்டை!

அந்த திருமுல்லை வாயிலில் வாழ்வது மாசிலா மணி - குற்றமில்லாத
மணி - ஒளி. அந்த மணி ஊன் - நம் உடலில் உணர்வாக ஒளியாக
இருப்பதை அறியவேண்டும். அறிந்தால் உணர்ந்தால் அந்த கடல்
தேன் என இனிக்கும் திருவருட்கடலாகும். தூய மத அமுதமாகும்.
சிவமாகும் வான் என நிற்கும் உயர்ந்து பரந்து நிற்கும் ஜோதியாகும்.

Saturday 4 February 2017

2.8 காட்சிப் பெருமிதம்


திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
உரை படாமல் ஒளிசெய் பொன்னே புகழ்
வரைபடாது வளர் வல்லி கேசநீ
தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ

அலை இல்லாத கடல் - நம் கண்ணாகிய கடல். உரைக்காமலே
பார்த்த மாத்திரத்தேலே சொல்லி விடாமல் இது பத்திரை மாற்றுப்
பசும்பொன் என்று!? அந்த அளவு ஒளிர் விட்டு பிரகாசிக்கும் ஒளி
நம் கண்மணி ஒளியில் உள்ளது! இறைவா உன்புகழ் சொல்லி மாளுமா?
நீ தரைபடா கந்தை சாத்தியது - இறைவா நீ தரையில் படாமல் - கந்தை
- ஓட்டை - சாத்தியது போர்த்தியது மூடியது! அதாவது நம் கண்மணி
மத்தியிலுள்ள ஓட்டையே கந்தை என்பதாகும்! தரைபடாமல் என்றது
கண்மணி நம் உடலை பற்றியிராமல் இருக்கும் தன்மையே! அலையிலா
கடலில் நம் கண்மணியினுள் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது.
நம் கண்மணி! நீர்மேல் இருக்கிறது நம் கண்மணி!

தந்தையே திருவலி தாயத் தலைவா நீ - பாடல் 2

எவ்வுயிர்க்கும் தந்தையான பரமாத்மாவே நீயே தலைவன்! திருவாகிய
நீ கண்மணியிலே வலி உணர்வு 'தா'  அப்போது தான் திரு - வலி - தா -அம்
என்பது!

பாலை கொண்ட பராபரா நீ பழஞ் சேலை கொண்ட திறம் - பாடல் 3

பாலை கொண்ட பராபரா -வெள்ளை விழியே பாற்கடல் எனப்படும்
அதில் கருவிழியில் மணியில் உள் ஒளியானவனே பராபரம்! நீ
பழஞ்சோலை கொண்டது - கண்மணி மத்தியில் சார்த்தியிருப்பது
நம் பழைய வினைகள் - அதுவே பழஞ்சோலைஎன்றார் வள்ளல் பெருமான்.

நீ தொடுத்த கந்தையை நீக்கி துணிந்தொன்றை உடுத்தவர் இலையோ - பாடல் 5

கண்மணி மத்தியிலுள்ள ஓட்டையை மறைத்துள்ள வினையாகிய
பழைய சேலையை மாற்றி - அதாவது வினைகளை சுட்டெரித்து
உள் விளங்கும் ஒளியால் தங்கமென ஜொலிக்கும் ஒளியால்
ஆடை புனைய வேண்டும்!

பரதேசி போல் இருந்தீர் - பாடல் 8

பரமாகிய வெட்டவெளியில் பரவெளியில் தேசி - வசிப்பவர்
பரதேசியாகும். நமகண்மணி ஒளி பரதேசியாகிய இறைவனே
வெளியிலே விளங்கும் ஒளியே!