Monday 18 January 2021

78 . நாரையும் கிளியும் நாட்டுறு தூது

                                        78 .  நாரையும்  கிளியும்  நாட்டுறு  தூது 

              கண்ணன்  நெடுநாள்  மண்ணிடந்தும் 
                        காணக்  கிடையாக்  கழலுடையார் 
              நண்ணும்  ஒற்றி  நகரார்க்கு 
                        நாராய்  சென்று  நவிற்றாயோ 
              அண்ணல்  உமது  பவனிகண்ட 
                        அன்று  முதலாய்  இன்றளவும் 
              உண்ணும்  உணவோ  டுறக்கமுநீத் 
                        துற்றாள்  என்றிவ்  வொருமொழியே 

              குரு  உபதேசம்  பெற்று  தவம்  செய்யும்  போது  கண்மணி  ஒளியை  எண்ணி  தவம் 
செய்கையில்  சிவமாகிய  ஒளி  வெளியே  நம்முன்னே  தோன்றி  மெல்லமெல்ல  நகர்ந்து  வலம் 
வருவதை  காணலாம்.  அதைக்  கண்டு  ஆனந்திக்கும்  தவசீலர்கள்  -  ஆத்மாக்கள்  அனைவரும் 
பெண்களே!  பெண்ணாகிய  ஆத்மாவாகிய  நாம்  இறைவனாகிய  -  பரமாத்மனாகிய  ஆணை  
சேர்தலே  பேரின்பம்!  அதற்குத்தான்  தவம்!  அந்த  அழகனை  கண்டாலே  ஆனந்த  மடையும் 
பெண்ணாகிய  ஆத்மா  பின்  உண்பதோ  உறங்குவதோ  செய்யாது!  சதாகாலமும்  சிவசிந்தனையிலேயே 
திளைக்கும்  ஆனந்த  அனுபவம்  பெற்றால்  ஊண்  உறக்கம்  வேண்டாமே!  அது  யாருக்கும் 
கிடைக்கும்?  தேவர்களாலும்  அறிய  முடியாத  திருவடி!  கண்ணன்  காண  முடியாத  திருவடி!
நாம்  நம்  கண்ணை  நாடினால்  நமக்குகிட்டும்!  கண்ணில்  மணியில்  ஒளியான  இறைவனிடம் 
நாரையே  நீ  தூது  போய்  என்  நிலை  கூறுவாய்  என்று  புனையப்பட்டது  இப்பாடல்.

77 . திருவுலாப் பேரு

                                        77 .  திருவுலாப்  பேரு 

               சீரார்  வளஞ்சேர்  ஒற்றிநகர்த் 
                       தியாகப்  பெருமான்  பவனிதனை 
               ஊரா  ருடன்சென்  றெனது  நெஞ்சம் 
                       உவகை  ஒங்கப்  பார்த்தனன்காண் 
               வாரார்  முலைக்கண்  மலைகளென 
                      வளர்ந்த  வளைகள்  தளர்ந்தனவால் 
               ஏரார்  குழலாய் என்னடிதான் 
                      இச்சை  மயமாய்  நின்றதுவே 

               அழகிய  நீண்ட  கூந்தலை  உடைய  தோழியே,  எல்லா  சிறந்த  வளங்களும்,  நிறைந்த 
திருவொற்றியூர்  உறையும்  தியாகப்பெருமான்  திருவீதியுலா  வந்தார்.  ஊராருடன்  நானும்  சென்ற  
எனது  நெஞ்சம்  மகிழ  கண்டு  களித்தேன்!  சிவத்தை  கண்ட  என்  கண்கள்  விம்மி  பூரித்து  ஆனந்தம் 
அடைந்தேன்!  அதனால்  கண்வளைகள்  தளர்ந்தன  சோர்ந்தன!  சிவத்தின்  மீதுகொண்ட  அன்பால் 
இந்நெகிழ்ச்சி  ஏற்பட்டது.

              தியாகப்  பெருமான்  பவனிவரப்  பார்த்தேன் 
                        கண்கள்  இமைத்திலகாண்  ......................... பாடல்  2

             நாம்  தவம்  செய்யும்  போது  சிவம்  -  ஒளி  வெளிப்பட்டுவிடும்.  அதை  பார்க்கலாம்!
கண்கொட்டாமல்  இமையாமல்  பார்த்துக்கொண்டே  இருக்கவேண்டும்.  இதுதான்  சாதனை!
அங்ஙனம்  சிவத்தை  பார்த்து  லயித்து  இருக்கும்போது  நாம்  புற  உலகத்தை  மறந்து  
போவோம்.  அதை  நயமாக  சொல்வதே  இப்பாடல்கள்  அனைத்தும்!

76 . தனித்திரு மாலை

                                        76 .  தனித்திரு  மாலை 

             வன்மூட்டை  பூச்சியும்  புன்சீலைப் 
                      பேனும்தம்  வாய்க்  கொள்ளியால் 
             என்  மூட்டைத்  தேகம்  சுறுக்கிட 
                      வேசுட்  டிராமுழுதும் 
             தொன்மூட்  டையினும்  துணியினும் 
                      பாயினும்  சூழ்கின்றதோர் 
             பொன்மூட்டை  வேண்டிஎன்  செய்கேன்
                      அருள்முக்கட்  புண்ணியனே 

             இறைவா  முக்கண்ணனே  பரம்  பொருளே,  மூட்டைபூச்சி  சீலைபேன்  இவைகள்  நம் 
மூட்டைதேகத்தை  பருத்த  உடலை  கடித்து  இரத்தத்தை  உறிஞ்சுகின்றதே!  பாயிலும்  துணியிலும் 
இருந்து  நம்மை  துன்புறுத்துகின்றது  எதற்காக  தெரியுமா?  நம்  உடலுள்  இருக்கும்  உயிராகிய 
பொன்மூட்டையை  பெறும்  பொருட்டே!  இறைவா  என்செய்வேன்!

             சக்திமான்  என்பர்நின்  தன்னை  ஐயனே 
             பத்திமான்  தனக்கலால்  பகர்வ  தெங்ஙனே .....................  பாடல்  3

             இறைவா  சிவமே  நீயே  சர்வசக்தியையுடையவன்!  அதுமட்டுமல்ல  சக்தியை  இடப்பாகம் 
கொண்டவன்!  உன்  மகிமையை  பத்திமான்களுக்கு  சொன்னால்  புரிந்துகொள்வர்.  நாத்திகம் 
பேசுவர்  அறியார்.


  

Friday 10 July 2020

75 . வடிவுடை மாணிக்கமாலை

                                            75 .  வடிவுடை  மாணிக்கமாலை 

             சீர்கொண்ட   ஒற்றிப்  பதியுடை  யானிடம்  சேர்ந்தமணி 
             வார்கொண்ட  கொங்கை  வடிவாம்  பிகைதன்  மலரடிக்குத் 
             தார்கொண்ட  செந்தமிழ்ப்  பாமாலை  சாத்தத்  தமியனுக்கே 
             ஏர்கொண்ட  நல்லருள்  ஈயும்  குணாலய  ஏரம்பனே 

             இறைவன்  நமக்கு  அருளிய  சீர்!  நமது  ஒற்றியூர்  நமது  கண்மணியில்  ஒற்றியிருக்கும்  
ஒளி!  அவன்  சிவம்  இருப்பது  வலதுகண்!  அவனோடு  சேர்ந்தமணி  -  இடதுகண்  சக்தி.  அந்த 
சக்தியின்  திருநாமம்  வடிவாம்பிகை!  வாலையின்  மற்றொரு  திருநாமம்!  மற்றொரு  கோயில்!
திருவொற்றியூர்!  வார்கொண்ட  கொங்கை  -  மறைக்கப்பட்ட  கொங்கை  -  கண்ணே  கொங்கை!
கண்மணிதுவாரம்  அடைபட்டதை  வார்கொண்ட  என்று  கூறப்பட்டது.  அந்த  தாயின்  மலரடிக்கு  
பழம்  என  கனிந்த  சுவையான  இனிமையான  செந்தமிழ்  பாமாலை  சார்த்திட,  மேல்  ஏற்றிவிட 
-  ஞானத்தில்  மேலேறிட  அருள்தாரும்  விநாயகனே!  அருள்க!

             வள்ளல்  பெருமான்  " வாலை "  தாயைப்  பற்றி  பாடிய  அருட்பாக்கள்  இவை!  வள்ளல் 
பெருமானுக்கு  அமுதூட்டிய  அன்னை!  வள்ளல்  பெருமான்  அன்னையின்  அருள்பெற்று  -  
வாலையின்  அருள்பெற்று  அப்பனின்  ஆனந்த  நடனம்  கண்டு  அருள்பெற்று  பேரானந்தம் 
எய்தினார்.

             கடலமு  தேசெங்  கரும்பே  
                     அருட்கற்  பகக்கனியே 
             உடல்உயி  ரேஉயிர்க்  குள்உணர் 
                     வேஉணர்  வுள்ஒளியே 
            அடல்விடை  யார்ஒற்றி  யார்இடங் 
                     கொண்ட  அருமருந்தே 
            மடலவிழ்  ஞான  மலரே 
                     வடிவுடை  மாணிக்கமே 

            பாற்கடலில்  கிடைத்ததுதானே  அமுதம்.  நமது  வெள்ளைவிழியே  பாற்கடல்  என்று  
சொல்வர்  ஞானியர்!  கண்ணிலிருந்து  -  தவம்  செய்து  பெறப்படும்  அமுதமே!  தவம்  செய்யும்போது 
வெள்ளைவிழி  சிவப்பாகிவிடும்.  சிவப்பேறிய,  கரும்  -  கண்மணி,  உள்ள  கண்மலர்!  சிவந்த 
கண்ணே!  தவம்  முதிர்ந்த  நிலையில்  கற்பகதருபோல  அருளை  வாரி  வழங்கும்!  நமது  உடலில் 
உள்ள  உயிரே -  கண்மணி  ஒளியே  -  இறைவனே!  உயிருக்குள்  உணர்வாய்  இருப்பவளே!  அந்த 
உணர்வுக்குள்  ஒளியாய்  இருப்பவளே!  வெற்றியை  தரும்  வெள்ளொளியின்  மேல்தோன்றும் 
ஒற்றியார் -  சிவமே!  அந்த  சிவத்தின்  இடப்பாகம்  அமர்ந்த  சக்தியே!  நீயே  கிடைத்தற்கரிய 
அருமருந்து!  பூத்த  -  விரிந்த -  மலர்ந்த  மலரே  அழகிய  ஒளிரும்  கண்ணே -  வடிவுடைமாணிக்கமே!

           கண்ணேஅக்  கண்ணின்  மணியே  மணியில்  கலந்தொளி 
                   செய்விண்ணே .................................    பாடல்  7

           கண்ணே  -  அக்கண்ணின்  மணியே  -  கண்மணியில்  மத்தியில்  ஊசிமுனை  துவாரத்தின் 
உள்  உள்ள  ஒளியே!  அவ்வொளி  அமைந்த  விண்ணே  -  ஆகாயமே!  நம்  கண்மணி  கருவிழிக்குள் 
எந்தபிடிப்புமின்றி  அந்தரத்தில்  ஆகாயத்தில்  விண்ணில்தான்  இருக்கிறது!  பூமி  எப்படி  ஆகாயத்தில் 
இருக்கிறதோ?  அதேபோல்  நம்  கண்மணியும்  உள்ளது!?  அண்டத்தில்  உள்ளவாரே  பிண்டத்திலும்!

           காமம்  படர்நெஞ்  சுடையோர்  கனவினும்  காணப்படா  ............  பாடல்  9

காமமாகிய  பேய்  பிடித்தாட்டும்  மனிதனுக்கு  கனவிலும்  காணக்கிடைக்காது  அம்பிகை 
வடிவம்!  மாயை  -  மகாமாயைதான்  காமமாதிய  துர்க்குணங்களை  வினைப்படிதந்து  நம்மை 
ஆட்டுவிக்கிறாள்!?  காமத்தை  ஆட்சி  செய்பவளே  அம்பிகைதான்!  அதனால்தான்  அவளை 
காமாட்சி  என்றனர்.  காமமில்லாத  மனிதனே  இல்லை!  காமத்திலிருந்து  எப்படி  மீள்வது?
இந்த  உலகத்திலேயே  யாருக்காவது  தாயிடம்  காமம்  வருமா?  எந்த  ஒரு  பெண்ணையும் 
தாயாக  பாருங்கள்!  அம்பிகையின்  வடிவமாக  பாருங்கள்!  அபிராமி  பட்டர்  எல்லா  பெண்ணையும் 
அபிராமியாகவே  பார்த்தார்.  அதனால்  தான்  அமாவாசை  அன்று  நிலவை  காட்டினாள்  அம்பிகை.
மகா  கவி  காளிதாசனும்,  தனக்கு  காளியருள்   கிடைக்க  காரணமான  மனைவியையே  தாய் 
என்று  அழைத்தான்.  மகாகவி  காளிதாசனுக்காகவும்  அமாவாசை  அன்று  நிலவை  காட்டினாள் 
காளித்தாய்!

            ஒரு வயது  பெண்ணையும்  அம்மாதாயே  என்றுதான்  அழைக்கணும்!  16 வயது  
பருவப்பெண்ணையும்  அம்மாதாயே  என்றுதான்  அழைக்கணும்!  எந்தப்பெண்ணையும்  அம்மா 
என்றே  பார்த்தால்,  அம்பிகையின்  அருள்கிட்டும்.  காமத்திலிருந்து  மீளலாம்!  அம்மா  தாயே  
நீயே  சரணம்  என  அம்பிகையின்  பாதத்தில்  சரணடைந்தால்!  அந்த  தாய்  இந்த  பிள்ளையை 
காத்தருள்வாள்!

            இந்த  உடலை  கொடுத்த  தாய்  தானே  நமக்கு  பாலூட்டி  சீராட்டி  வளர்ப்பாள்!  இந்த 
உடலுக்குள்  இருக்கும்  உயிர்  கொடுத்ததாய்  இறைவியே  அமுதூட்டி  உயிர்  வளர்ப்பாள்!?
பின்னர்தான்  பரம்பொருள்!  முக்திகிட்டும்!

            தாயைப்  பணியாதவன்  தறுதலையாவான்!  தாயை  பணிந்தால்!,  தாயைப்போல  நம்மை 
அரவணைப்பவர்  இவ்வுலகில்  வேறு  யார்  உளர்?!  தாயில்லாமல்  நானில்லை!  யாருமில்லை!?
தாயின்  மகத்துவம்,  பெருமை  அறிந்தவனே  ஞானம்பெறுவான்!

           திருஞான  சம்பந்தருக்கு  3  வயதில்  அமுதூட்டிய   தாய்!  வள்ளலாருக்கு  அண்ணி  உருவில் 
வந்து  அமுதூட்டியதாய்!  எல்லா  சித்தரும்  ஞானியரும்  போற்றும்  தாய்  " வாலை "!  இந்தியாவின் 
வடக்கே  காஷ்மீரிலே  வைஷ்ணவி  தேவியாய்  வாலை!  இந்தியாவின்  கிழக்கே  கல்கத்தாவில் 
காளியாய்  வாலை!  இந்தியாவின்  மேற்கே  பம்பாயில்  லட்சுமியாய்  வாலை!  இந்தியாவின் 
தெற்கே  கன்னியாகுமரியில்  கன்னியாகுமரியாய்  வாலை!  எங்கெங்குகாணினும்  சக்தியடா!
தாய்ப்பால்தானே  பிறந்த  குழந்தைக்கு  சிறந்தஉணவு!  இனி  பிறவாமலிருக்க  " வாலை "  தரும் 
அமுதம்  பருகவேண்டும்!  எல்லா  பெண்களையும்  தாயாக  பார்த்து,  வாலையை  பணிந்து 
பக்தியுடன்  தவம்  செய்தால்  கிட்டும்  வாலை  தரிசனம்!  தருவாள்  அமுதம்!  முக்தியை  தர 
சக்தியின்  அருளே  அவசியம்  தேவை!  பிறந்த  குழந்தைக்கு  தேவை  தாய்ப்பால்!  இனி 
பிறவாமலிருக்க  நமக்கு  தேவை  வாலை  அமுதம்!

           எல்லாம்  வல்ல  மகாமாயை,  அகிலாண்ட  கோடி  பிரம்மாண்ட  நாயகி,  எவ்வுயிர்க்கும் 
தாய், ஆதிசக்தி  " வாலை "  எண்ணிலா  ஊர்களில்  கோயில்  கொண்டிருந்தாலும்,  பற்பல 
பெயர்களில்  உருக்கொண்டிருந்தாலும்  வாலை  வாலையாகவே  கோயில்  கொண்ட  
புண்ணியதலம்தான்,  முக்கடலும்  சங்கமிக்கும்  இந்தியாவின்  தென்கோடிமுனையான 
கன்னியாகுமரி!

            அடியேனை  இங்கு  வரவழைத்து  வாழ்வு  தந்து  குருவாக்கி  காட்சி  தந்து  அருள்  புரிந்து 
படியளக்கும்  தாய்  கன்னியாகுமரி  " வாலை "!  இதுவரை  இவ்வுலகில்  எல்லோராலும்  மறைத்து 
இரகசியம்  என்று  சொல்லப்பட்ட  ஞானத்தை  வெட்ட  வெளிச்சமாக்கி  26  நூற்களில்  ஞானரகசியங்களை 
வெளிப்படுத்தவைத்து  வெளியிடவைத்து  என்னை  எங்களை  வாழவைத்துக்  கொண்டிருக்கிறாள் 
" வாலை "!  வாலையின்  பாதத்தில்  சரணடைந்ததால்  புண்ணியம்  பெற்றேன்!  கண்ணியனானேன்!

            அந்த  வாலைத்தாயை  நீங்களும்  காணவேண்டாமா?  வாருங்கள்  கன்னியாகுமரிக்கு!  
வாலை  அருள்பெறலாம்!  வரம்பல  பெறலாம்!  வாழ்வாங்கு  வாழலாம்!

            சித்தருக்கெல்லாம்  சித்தர்!  கல்பகோடி  காலமாக  இருக்கும்  சித்தர்!  காகபுசுண்டர்!  இந்த 
வாலையைப்பற்றி  கூறுவதை  பாருங்கள்!  

            இடப்பாக  மிருந்தவளு  மிவளே  மூலம் 
                    இருவருக்கும்  நடுவான  திவளே  மூலம் 
            தொடக்காக  நின்றவளு  மிவளே  மூலம் 
                    சூட்சமெல்லாங்  கற்றுணர்ந்த  திவளே  மூலம் 
            அடக்காக  அடக்கத்துக்  கிவளே  மூலம் 
                    ஐவருக்குங்  குருமூல  மாதி  மூலம் 
            கடக்கோடி  கற்பமதில்  நின்று  மூலம் 
                    கன்னியிவள்  சிறுவாலை  கன்னிதானே 

            கன்னியாகுமரி  எனப்பெயர்  கொண்ட  கன்னியாகுமரி  ஊரில்  கோயில்கொண்டுள்ள  இவளே 
" வாலை "!  மூலப்பரம்  பொருள்!  தாய்!  சக்தி!  நமக்கு  தவம்  செய்ய  சக்தி  வேண்டாமா?

           தாயை  பணியுங்கள்!  தயவுடன்  வாழுங்கள்!  தவம்  செய்யுங்கள்!  தங்கஜோதி  காணலாம்!
சூரியசந்திர  உதய  அஸ்தமனம்  ஒருசேர  காணும்  உலகிலேயே  உள்ள  ஒரே  இடம்  
கன்னியாகுமரி!

          எல்லா  உலகுந்  தந்த  நின்னை .............  பாடல்  12

          இந்த  பிரபஞ்சத்தையே  தந்தவள்  தாய்!  எவ்வுயிர்க்கும்  தாய்!  வடிவுடைய  மாணிக்கமாக 
அழகான  கண்ணாக  திகழ்கிறாள்!

          வினையாள்  உயிர்மல  நீக்கிமெய் 
                  வீட்டின்  விடுத்திடு  நீ ............... பாடல்  14

          நமது  உயிரை  வினையாக  மலம் -  மும்மலம்  ஆட்டிவைக்கிறது.  அதை  நீக்கி  மெய்வீட்டில் 
சேர்த்திடுவாய்  தாய்!  உயிர்மலம் -  நம்உயிரோடு  சேர்ந்து  இருக்கிறது  மலமாகிய  நம்வினைகள்!

         முத்தேவர்  விண்ணன்  முதல்  தேவர்  சித்தர்முனிவர்  

         மற்றை  எத்தேவரு  நின்னடி  நினைவார் 

         நினைக்கின்றிலர்  தாம்  செத்தேபிறக்கும்  சிறியர் ............ பாடல்   37

         மும்மூர்த்திகள்  இந்திரன்  முதலான  தேவர்கள்  சித்தர்  முனிவர்  மற்றும்  எத்தேவரும்  தாயே 
வாலையே  உன்  திருவடியை  பணிவர்!  உன்னை  நினைக்காதவர்கள்  செத்து  பிறக்கும்  சிரியரே!

         முக்திபெற  வேண்டின்  வாலையருள்  வேண்டும்!  தேவரும்  மூவரும்  சித்தர்  முனிவோரும் 
வணங்குகிறார்கள்  என்றால்  எவ்வளவு  மேலான  நிலை!  அற்ப  பதரான  நாம்  உயர்வு  பெற 
வேண்டுமானால்  வாலையை  பணிந்து  அருள்பெற்று  அமுதம்  அருந்தியே  ஆக  வேண்டும்!
வாலையை  பணியவில்லை  எனில்  முக்தி  கிடையாது!?

         திருநாள்  நினைந்தொழும்  நன்னாள் 
         தொழாமல்  செலுத்திய  நாள்  கருநாள் ................. பாடல்  38

         தாயை -  வாலையை  நினைந்து  வணங்கும்  நாள்தான்  நல்லநாள்  திருநாள்  ஆகும்.  தாயை 
தொழாத  நாள்கருநாள்  துன்பம்தரும்நாள்.

         வாணாள்  அடைவர்  வறுமை 
                 யுறார்நன்  மனைமக்கள்பொன் 
         பூணாள்  இடம்புகழ்  போதம் 
                 பெறுவர்பின்  புன்மைஒன்றும் 
         காணார்நின்  நாமம்  கருதுகின் 
                 றோர்ஒற்றிக்  கண்ணுதல்பால் 
         மாணார்வம்  உற்ற  மயிலே 
                  வடிவுடை   மாணிக்கமே ..................  பாடல்   39

         ஒற்றி  கண்ணுதல்  பால்  மாணார்வம்  உற்றமயிலே  வடிவுடை  மாணிக்கமே  -  நம் 
கண்மணியில்  ஒற்றியிருக்கும்  ஒளியை  சார்ந்து  பேரார்வத்துடன்  தவம்  செய்தால்  நம்  இடது 
கண்  ஒளி  பலவர்ண  ஒளியுடன்  காட்சி  தரும்!  அழகான  ஒளிரும்  கண்ணே  -  இடது  கண்ணே 
தாய்ஸ்தானம்.  அந்த  தாயை  எப்போதும்  கருத்தில்  வைத்து  தவம்  செய்வோர்  வாழ்நாள் 
நீடிக்கும்  நீண்ட  காலம்  வாழ்வர்!  அவர்  வாழ்க்கையில்  வறுமை  தலைகாட்டாது!  நல்லமனைவியும் 
பிள்ளைகளும்  இறைவன்  அருளால்  அமைவர்.  தேவைக்கு  எப்போதும்  பொண்  பணம்  கிட்டும்!
நல்ல  அடியார்கள்  அன்பர்கள்  கிடைப்பர்!  பெரும்  பேரும்  புகழும்  பெறுவர்!  எல்லோராலும்  
போற்றப்படுவார்!  இருக்க  வீடு  அமையும்!  எப்போதும்  போதம் -  உணர்வு  பெற்றே  இருப்பர்.
மெய்யுணர்வு  எப்போதும்  இருக்கும்!  மெய்யுணர்வு  இருக்கும்வரை  ஒரு  துன்பமும்  வராது!

        தாயை  தொழுபவர்களுக்கு  சகல  சம்பத்தும்  கிடைக்கும்.  வாழ்வாங்கு  வாழ்வர்.   

           கதியே  கதிவழி  காட்டுங்கண்ணே ..........................  பாடல்  75

           மனிதனாக  பிறந்த  நாம்  அடையவேண்டிய,  சேரவேண்டிய  நற்கதி  இறைவன்  திருவடியே!
நாம்  பெறவேண்டிய  நல்லகதி  -  முக்தியடைவது  அதற்குமுன்  நாம்  இறைவன்  திருவடியை  
சரணடைய  வேண்டும்.  அந்த  இறைவன்  திருவடியை  -  முக்தி  பேற்றையடைய  வழிகாட்டுவது 
நமது  கண்ணே!  நமது  கண்மணியின்  மத்தியில்  ஊசிமுனையளவு  சிரியதுவாரம்  உள்ளது 
அது  மெல்லிய  சவ்வால்  மூடப்பட்டுள்ளது.  அதன்  உள்ளே  இறைவனே  ஜோதியாக  இருக்கிறான்.
கண்ணே  வழிகாட்டி!  விழிகாட்ட  வினை  தீரும்  பேரின்பம்  கிட்டும்.

           கற்பதும்  கேட்பதும்  எல்லாம்  நின்  அற்புதக்  கஞ்சமலர்ப்  
                   பொற்பதம்  காணும்  பொருட்டு ...................  பாடல்  90

           வேதபுராண  இதிகாசங்கள்  மற்றுள்ள  ஞானநூற்களை  கற்பதும்  அவற்றின்  உபதேசங்களை 
கேட்பதும்  எல்லாம்,  தாயாக  இருந்து  அமுதூட்டும்  உலகன்னை  தூய  பொற்பாதம்  சேரவே!

   

Monday 6 July 2020

74 . உள்ளப் பஞ்சகம்

                                        74 .  உள்ளப்  பஞ்சகம் 

           நீரார்  சடையது  நீண்மால்  விடையது  நேர்கொள்கொன்றைத் 
           தாரார்  முடியது  சீரார்  அடியது  தாழ்வகற்றும் 
           பேரா  யிரத்தது  பேரா  வரத்தது  பேருலகம் 
           ஓரா  வளத்ததொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே 

          ஒன்றுண்டேமுக்  கண்ணொடு  என்  உள்ளகத்தே!  என்  உள்ளம்  சூரியன்  சந்திரன்  
அக்னி  என  மூன்று  கலைகளை  உடையது!  மூன்று  கண்!  அது  வற்றாத  கங்கை -  நீர் 
நிறைந்தது.  நீண்டு  பெரிய  வெள்ளை  ஒளி!  அழகிய  பொன்னான  கொன்றை  பூப்போன்றது!
கண்மலர்!  மஞ்சள்ஒளி!  சீரான  இரு  திருவடிகள் -  இரு  கண்கள்.  அடியார்களின்  எல்லா 
துன்பங்களும்  நீங்கும்  கண்  மணிஒளியாக  இறைவனை  பற்றினால்!  ஓர்  உருவம்  ஒரு 
நாமம்  இல்லை!  ஆயிரம்  நாமமுடையான்!  அகண்ட  இந்த  உலகத்தில்  எல்லாவற்றையும் 
அருளவல்லவன்  இறைவன்  ஒருவரே!  எல்லாம்  வல்லவர்!  எல்லாமானவர்!  இறைவன் 
ஒருவரே!

          தீக்கண்ணார்  நுதலது  கண்ணார்  மணியது  கண்டுகொள்ள 
                   ஒண்ணா  நிலையது ...........................    பாடல்  4

          நமது  கண்களில்  தீ  -  நெருப்பு  உள்ளது!  பெரும்நெருப்பு -  பேரொளி -  பெருஞ்ஜோதி 
சிறு  ஜோதியாக  நம்  கண்மணி  மத்தியில்  ஊசி  முனை  துவாரத்தின்  உள்ளே  உள்ளது.
இதுவே  எண்ணி  பார்க்க  முடியாத  மிகப்பெரிய  நிலை!  இரகசியம்.

         பிறவா  நெறியது  பேசாநிலையது  பேசில்  என்றும் 
                 இறவா  உருவது .................................   பாடல்  5

        நம்  கண்மணி  மத்தியிலுள்ள  ஊசி  முனை  துவாரத்தின்  உள்  அருட்பெருஞ்ஜோதி  
ஆண்டவர்  இருப்பதை  உணர்ந்து  தவம்  இயற்றும்  நெறியே  பிறவா  நிலையை  தருவதாகும்!
கண்மணி  பேசாதநிலை!  " கண்டவர்  விண்டிலர்  விண்டவர்  கண்டிலர் "  என்ற  பழமொழி 
இதுபற்றியே!  கண்டவர் -  கண்.  அது  பேசுமா?  பேசாது!  விண்டவர் -  வாய்.  அது  காணுமா?
காணமுடியாது!  காணும்  கண்  பேசாதல்லவா?!  மௌனமாகதானே  இருக்கும்?!  அதனால்தான் 
கண்ணை  " மௌனம் "  என்றார்!  பேசாநிலை  என்றால்  கண்தானே!  நாம்  தவம்  செய்யச் 
செய்ய  கண்மணி  ஒளி  -  இறைவன்  ஆத்மா  நமக்கு  குருவாக  அமையும்.  நமது  சூட்சுமசரீரமே 
-  ஆத்ம  சரீரமே  -  குருவாகும்.  அந்த  குரு  நம்முடன்  பேசுவார்!?  அந்த  நிலை  நாம்  பெற்றால் 
பேசா  மௌனமான  கண்ஒளி  பேசினால்  நமக்கு  இறவா  நிலை  கிட்டும்!  அந்த  உருவம்  ஜோதி
-  ஆத்மா  இறக்காது  அல்லவா?  ஆத்மாவை  உணர்ந்தவன்  மரணமிலா  பெருவாழ்வு  பெறுவான்.

           

Wednesday 1 July 2020

73 . திருச்சாதனத் தெய்வத்திறம்

                                             73 .  திருச்சாதனத்  தெய்வத்திறம் 

              உடையாய்உன்  அடியவர்க்கும்  அவர்மேல்  பூண்ட 
                         ஒண்மணியாம்  கண்மணிக்கும்  ஓங்கு  சைவ 
              அடையாளம்  என்ன  ஒளிர்  வெண்ணீற்  றுக்கும் 
                         அன்பிலேன்  அஞ்சாமல்  அந்தோ  அந்தோ 
              நடையாய  உடல்முழுதும்  நாவாய்  நின்று  
                         நவில்கின்றேன்  என்பாவி  நாவைச்  சற்றும் 
              இடையாத  கொடுந்தீயால்   சுடினும்  அன்றி 
                         என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய் 

              இறைவா  உன்  அடியாரை  போற்றுகிலேன்!  அடியார்களின்  ஒளிபொருந்திய  
கண்மணியை  கண்டு  உணராதவனாயிருக்கிறேன்!  சைவ  நெறி  தழைத்தோங்க  தவம் 
செய்வோர்  திருவடியில்  ஒளிரும்  வெண்ணீருக்கும்  அன்பிலாதவனாய்  உள்ளேன்!  இறைவன் 
திருவடியாகிய  கண்மணியை  -  அதனுள்  ஒளிரும்  ஒளியை  -  அதிலிருந்து  பொங்கி  பாயும்  -
அருள்பொழியும்  வெண்ணீரும்  அறியாமல்,  தூய  அடியாரை  அறியாத  அன்பில்லாதநான் 
வேறு  என்ன  பேசினாலும்  பயனில்லை!  சைவர்  யார்  எனில்  சதா  காலமும்  கண்ணீர்  மல்க 
சிவத்தை  எண்ணி எண்ணி  பேரானந்தத்தில்  திளைப்பவரே!  

             கண்ணுதலே  நின்அடியார்  தமையும்  நோக்கேன் 
                               கண்மணிமா  லைக்கெனினும்  கனிந்து  நில்லேன் 
             பண்ணுதல்சேர்  திருநீற்றுக்  கோலம்  தன்னைப் 
                               பார்த்தேனும்  அஞ்சுகிலேன்  பயனி  லாமே 
             நண்ணுதல்சேர்  உடம்பெல்லாம்  நாவாய்  நின்று 
                               நவில்கின்றேன்  என்கொடிய  நாவை  அந்தோ 
             எண்ணுதல்சேர்  கொடுந்தீயால்  சுடினும்  அன்றி 
                               என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய் 

            கண்நுதலே  -  கண்மணி  ஒளியே  இறைவா  உன்  அடியார்களை  பார்த்து  பணிந்து 
தொண்டு  செய்யவும்  தெரியவில்லை!  கண்மணிமாலைக்காவது  கனிந்து  நிற்கவும் 
தெரியவில்லை!  அடியேனை  வள்ளல்பெருமான்  1992-ம்  வருடம்  கண்மணிமாலை  எனும் 
நூலை  எழுதி  வெளியிட  வைத்தார்.  ஆன்றோர்களே  " கண்மணிமாலை "  நூலை  படித்து 
ஞான  இரகசியங்களை  உணர்ந்து  உயர்வடையுங்கள்  அடியார்களை  போற்றத்தான்  
தெரியவில்லை,  கண்மணிமாலை  நூலை  படித்தாவது  கடவுளை  உணர்ந்துகொள்ளுங்கள்!
ஞானம்  பெற்றுக்கொள்ளுங்கள்.  நாம்  தவம்  செய்யும்போது  கண்மணியிலிருந்து  நீர்முத்து 
முத்தாக  சொட்டும்.  அருவியென  பாயும்  அது  தொடர்ந்து  பாய்வதால்  மாலை  என்றார்.
வள்ளல்பெருமான்!  பண்  -  நுதல்சேர்  திருநீற்றுக்கோலம்  -  பண்  என்றால்நாதம்.  நம்  
கண்மணி  ஒளியில்  மனதை  ஊன்றி  தவம்  செய்யும்போது  திருஇருக்கும்  -  ஒளி  இருக்கும் 
இடமான  கண்மணி  மத்தியிலிருந்து  நீர்  முத்துமுத்தாக  பாயும்  திருவிலிருந்து  -  மணியிலிருந்து 
வரும்  நீர்  -  திருநீர்  எனப்பட்டது.  கண்களில்  திருநீர்  பாயப்பாய  ஒளிக்காட்சியும்  அதைத் 
தொடர்ந்து  நாதத்தொனி  கேட்கும்!  ஒலிஒளியே  சக்தி  சிவமே  இறைவன்!

             இப்படி  தவம்  செய்யும்  அடியார்களை  போற்றாமல்,  " கண்மணிமாலை "  படித்து  
ஞானமும்  பெறாமல்,  கண்ணீர்  பெருக  நாததொனியை  சதாகாலமும்  கேட்டு  இறைவனை 
எண்ணி  உருகும்  அடியாரின்  தவக்கோலத்தை  பார்த்து  சற்றும்  பயமின்றி  வீண்  பேச்சு 
பேசுகின்றவர்களை,  அவர்கள்  நாவைசுட்டு  பொசுக்கினாலும்  போதாதே  என்கிறார்  வள்ளல்  
பெருமான்!  இறைவன்  புகழ்  பாடுங்கள்!  இறைவனை  உன்னிலே  கண்மணியிலே  ஒளியாக  
இருப்பதை  உணருங்கள்!  ஞானம்பெற  கண்மணி  ஒளியை எண்ணி  தவம்  செய்க!  தவம்செய்யும் 
மெய்யடியார்களை  போற்றுக!  ஞானநூலாம்  " கண்மணி  மாலை "  யை  படித்து  உணர்க!

            வள்ளல்பெருமான்  எமக்களித்த  பெரும்  பேறாக  இப்பாடலை  அடியேன்  கொள்கிறேன்.
150  வருடங்களுக்கு  முன்னரே  " கண்ணமணி  மாலை "  யின்  மகத்துவத்தை  திருவருட்பாவால்  
பாடி  எம்மை  பணிசெய்ய  வைத்து  ஆசீர்வதித்துள்ளார்!  உடனிருந்து  காக்கிறார்!  எப்படி  நன்றி 
சொல்வேன்!  என்னையும்  ஒரு  பொருட்டாக  கருதி,  ஞானம்  பெற  வைத்து,  ஞான  குருவாக்கி,
என்னுள்ளிருந்து,  வரும்  அடியார்க்கு  உபதேசம்  தீட்சை  வழங்கி,  கண்மணிமாலை  தொடங்கி 
இதுவரை  26  ஞான  நூற்கள்  எழுதி  வெளியிட  வைத்து  இப்போது  திருவருட்பாவுக்கும்  
மெய்ஞ்ஞான  உரை  எழுதவைத்த  வள்ளல்  பெருமானின்  பொன்னான  திருவடிகளில்  பணிந்து 
சரணடைவதை  தவிர  பெரும்  பேறுவேறு  உண்டுமா?  வள்ளல்  மலரடி  வாழ்க  வாழ்க  வாழ்க!

            பக்தி  இல்லாமல்  முக்தி  இல்லை  என  வள்ளல்  பெருமானின்  முந்தைய  பாடல்களில் 
கண்டோமல்லவா?  அடியேனையும்  ஆரம்பகாலங்களில்  திருச்செந்தூர்  முருகனை,  கன்னியாகுமரி 
பகவதியம்மனை,  சபரிமலை  ஐயப்பனை,  சுசீந்திரம்  ஆஞ்சநேயரை,  வடிவீஸ்வரம்  சுந்தரேஸ்வரரை 
அழகம்மனை  வணங்கவைத்து  பக்திசெலுத்தி  பாடவைத்து  வழிகாட்டி  ஞானத்துக்கு  விழிகாட்டி 
அழைத்துச்சென்றார்  வள்ளலார்!  இன்னும்  ஏராளமான  புண்ணிய  ஸ்தலங்களுக்கும்  போகவைத்து 
தெய்வத்தை  வணங்க  வைத்து  அருள்  பாலித்தார்  வள்ளல்  பெருமான்!  மேலும்  திருச்சி  ஞானசித்தர் 
ஜோதி  இராமசாமி  தேசிகரை  குருவாக்கி  திருவடி  தீட்சை  தந்தார்  வள்ளலார்!  பின்னர்  பல  
ஞானிகள்  தரிசனம்  கிட்டியது!  சமாதிகொண்ட  பல  மகான்களை  தரிசிக்கவும்  அருள்பெறவும் 
வள்ளல்  கருணையே  காரணமாயிற்று!  அவர்களையும்  போற்றி  வணங்கி  கவிபாட  வைத்தார் 
வள்ளல்  பெருமான்!  அடியேன்  குருதிருச்சி  ஞானசித்தர்  ஜோதி  இராமசாமி  தேசிகர்,  கன்னியாகுமரி 
மாவட்டம்  அறுகம்புல்  சித்தர்,  கன்னியாகுமரி  மாவட்டம்  குருமகாதேவ்  ஆகிய  மூன்று  மகான்களுக்கும் 
முன்னின்று  சமாதி  வைக்க  வள்ளல்  பெருமான்  அருள்  பாலித்தார்!

             அடியேன்  குரு  திருச்சி  ஞான  சித்தர்  சமாதியாகும்  நாளில்  கடைசியாக  அடியேனை  
கூப்பிட்டு  குருபீடத்தை  தந்து  ஆசி  வழங்கினார்.  1980ல்  தீட்சை  பெற்று  12  வருடம்  கழித்து  
1992 - ல்  " கண்மணிமாலை "  நூலை  எழுதி  வெளியிடச்  செய்தார்  வள்ளல்பெருமான்.  அடுத்து 
12  வருடத்தில்  2004ல்  கன்னியாகுமரி  வாலை  சந்நிதியில்  வள்ளல்  பெருமான்  ஆசியால்  குருபீடம் 
பெற்றேன்!  பிறந்ததிலிருந்தே  " வாலை "  கன்னியாகுமரி  பகவதியம்மன்  பொற்பாதம்  பணியும் 
பக்தனாகவேயிருந்தேன்!  வளர்ந்தாள்  தாயாக  " வாலை " !  காத்தாள்  தந்தையாக  " வாலை " !
குருவாகவும்  இருந்து  உபதேசம்  தீட்சை  கொடுக்க  அருள்பாலித்தாள்  " வாலை " !  கண்டேன் 
என்  தாயை  " வாலையை "  கண்களாலேயே!  கன்னியாகுமரியிலேயே!  வள்ளல்பெருமான் 
என்  உள்ளத்திலிருந்து  உரைக்கிறார்  உபதேசம்!  என்  கண்களிலிருந்து  கொடுக்கிறார் 
தீட்சை!  வள்ளல்பெருமான்  கருணையால்  இதுவரை  26  ஞானநூற்கள்  எழுதிவெளியிட்டுள்ளேன்.
இப்போது  திருவருட்பா  மெய்ஞ்ஞான  உரை  எழுதத்தூண்டி  என்னை  மகிமைபடுத்துகிறார் 
வள்ளல்பெருமான்.

            அவர்  திருவடியே  கதி  என  கிடக்கும்  எனக்கு  வந்தவர்களுக்கு  உபதேசம்  தீட்சை 
கொடுப்பது  ஒன்றுதான்  வேலை!  வேறுபணி  இல்லை!  மரணமிலா  பெருவாழ்வைபோதிப்பது!
ஞான  இரகசியங்களை  வெட்ட  வெளிச்சமாக்குவது!  எல்லோரும்  ஞானம்  பெற,  இறைவனை 
அறிய,  உணர  ஞான  நூற்களை  வெளியிடுவது!

           உலகமனைத்தும்  ஒரே  கடவுள்  என்ற  கொள்கையில்,  நாமெல்லாம்  மனிதர்கள் 
என்ற  ஒரே  உணர்வில்  சமாதானமாய்  அன்பாய்  பண்பாய்  வாழவேண்டும்!  இதுவே 
சனாதானதர்மம்!  சன்மார்க்கம்!  எல்லா  ஞானிகளும்  இதற்கு  துணை  நிற்பர்  என்ற 
நம்பிக்கை  எனக்கு  உண்டு!  வாருங்கள்  உலகோரே!  மரணமிலா  பெருவாழ்வில்  
வாழ்ந்திடலாம்!  ஜாதி  மத  இன  பேதமில்லை!  எல்லோரும்  இன்புற்றிருக்க  வழிகாட்டுவதே!
விழிகாட்டி, தூண்டி  உணர்த்துவது  ஒன்று  தான்  எமது  பணி!  சற்குரு  வள்ளலார்  துணை  
என்றும்  உண்டு!

 
 

                       

Sunday 28 June 2020

72 . தவத்திறம் போற்றல்

                                           72 .  தவத்திறம்  போற்றல் 

              வில்வத்  தொடும்பொன்  கொன்றைஅணி 
                         வேணிப்  பெருமான்  ஒற்றிநகர் 
              செல்வப்  பெருமான்  சிவபெருமான் 
                         தியாகப்  பெருமான்  திருஅழகைக் 
              கல்வைப்  புடைய  மனம்  களிக்கக் 
                         கண்கள்  களிக்கக்  கண்டுநின்றேன் 
              இல்லைப்  புடையேன்  அம்மாநான் 
                         என்ன  தவந்தான்  செய்தேனோ 

               வில்வ  தழையும்,  கொன்றை  மலர்மாலையும்  அணிந்து  சடை  உடைய  பெருமான் 
இருப்பது  நம்  ஒற்றி  நகரான  கண்மணியில்!  அவர்  செல்வப்பெருமான்  சிவபெருமான்  
தியாகப்பெருமான்.  அவரின்  மேனி  அழகை  கல்மனம்  படைத்த  நான்  கண்கள்  களிக்ககண்டு 
மகிழ்ந்து  நின்றுவிட்டேன்.  இல்லறவாசியானநான்  அந்த  ஒப்பில்லா  இறைவனை  காண  என்ன 
தவம்  செய்தேனோ?!

              பிறப்பை  அகற்றும்  ஒற்றியில்  போய்ப் 
              பேரானந்தம்  பெறக்  கண்டேன் 
              இறப்பைத்  தவிர்த்தேன் ...............................  பாடல்  6

,             இனிபிறவா  நிலையை  தரும்  ஒற்றியாகிய  கண்மணி  ஒளியில்  போய்  நின்று  கண்டு 
அகமிக  மகிழ்ந்து  பேரானந்தம்  பெற்றேன்!  கண்டேன்  கண்களால்  கடவுளை!  அதன்  பயனால் 
இறப்பும்  இல்லாதநிலை  பெற்றேன்.  சாகாவரம்  பெற்றேன்.  இறைவன்  இருக்கும்  ஒற்றியூருக்கு 
கண்மணி  ஒளிக்கு  நாம்  போனால்  பிறப்பு  இறப்பு  இல்லாத  பேரின்ப  பெருவாழ்வு  பெறலாம்.

              தியாகப்பெருமான்  திருக்கூத்தைக்  கல்லாம் 
              கொடிய  மனம்  கரையக்  கண்டேன் 
              பண்டு  காணாத  எல்லாம்  கண்டேன் ......................  பாடல்  7

              நம்  ஒற்றியூரில்  கோயில்  கொண்டிருக்கும்  தியாகப்  பெருமானின்  திருநடனத்தை 
தவம்செய்து  செய்து  கல்லான  என்  கொடிய  மனமும்  கரையும்  படியாக  கண்டு  பேரானந்தம் 
கொண்டேன்.  அதுமட்டுமா?  இதுவரை  காணாத  அற்புத  காட்சிகளை  எல்லாம்  கண்ணில் 
கண்டேன்.

              ஒற்றி  நகர்தன்னில்  பார்த்தேன்  வினைபோம் 
              வழிபார்த்து  என்னை  மறந்தேன் ...................         பாடல்   9

              ஒற்றிநகரில்  -  என்  கண்மணியில்  பார்த்து  பார்த்து  தவம்  செய்யச்செய்ய  என் 
வினையெலாம்  இல்லாது  போக  கண்டு  என்னையே  மறந்தேன்.  பேரானந்தம்  அடைந்தேன்!

              சோம  சுந்தரனாராக  மதுரையில்  அருள்  பாலிக்கும்  சிவபெருமான்,  திருஞானசம்பந்தருக்கு 
முத்துச்சிவிகை  குடையொடுபொன்  சின்னம்  கொடுத்த  சிவபெருமான்  ஒற்றியூராகிய  நம்  
கண்மணியில்  தான்  அருள்  ஜோதியாக  துலங்குகிறார்!